முதியவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு.

கோவை ஜூன் 11 கோவை, கவுண்டம்பாளையம் சரவணாநகர், சபரி கார்டனை சேர்ந்தவர் ஜெயராமன் ( வயது 75) இவர் கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜெயராமன் கவுண்டம்பாளையம் போலீசில்புகார் செய்தார் .சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அரிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.