இபிஎஸ் ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்- கோவை செல்வராஜ் பேட்டி..!

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க ஓ பி.எஸ் அணியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பு கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.
நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.யை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி, முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி, முனுசாமிக்கு எதிராக பேசிய போது ஆதரவு கொடுத்தவர் ஓ. பன்னீர்செல்வம் ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் உழைக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் ஜெயலலிதா ஓபிஎஸ் கட்சிக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது. தொண்டர்களை அடிமைகள் போல நடத்துவதை எடப்பாடி நிறுத்தி கொள்ள வேண்டும். அ.தி.மு.க அழிந்து விட கூடாது என நினைப்பவர் பிரதமர். அந்த
பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ க, அ.தி.மு.க விவகாரத்தில் தலையீடு செய்வதில்லை. அ. தி.மு.க வின் கொடி, சின்னம் முடக்கப்படவில்லை. அனைத்தும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும்..
1000 கோடி செலவு செய்து பதவி வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி, முனுசாமியை வைத்து பேசுகிறார். அ.தி.மு.க.வில் தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.. இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி.
கொடநாட்டில் கொலை கொள்ளை நடந்தபோது தற்போதைய முதலமைச்சர் ஏன் பாதுகாப்பு தரவில்லை என கேட்டார் அதற்கு ஜெயலலிதாவின் வீட்டை தனியார் வீடு அதற்குப் பாதுகாப்பு தர முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன். ஊழல் குறித்து தகவல் சொல்லியுள்ளோம். அதன் அடிப்படையில் ரைடும் நடந்து வருகிறது.கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள் ஆனால் கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை.ஓ பன்னீர்செல்வம் ஒரு முதலமைச்சர் ஆக இருந்து மற்றொருவரை முதலமைச்சராக அறிவித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் பதவி விட்டு கொடுத்தவர் இதிலிருந்து யார் துரோகிகள் என்பது சரியாக தெரியும் கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி. ஓ பன்னீர்செல்வம் தீர்புக்கு பின் கட்சி அலுவலகத்துக்குள் செல்வார். கட்சி தலைவரும் ஓ பன்னீர் செல்வம் தான் பொருளாளரும் அவர் தான் . சசிகலா தற்போது கட்சியின் உறுப்பினர் எப்பவும் போல அவர் இருப்பார் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர் அவர் தெரிவித்தார்.