மனைவிகண்முன் தீக்குளித்துகணவர் தற்கொலை .

கோவை மே 16கோவை சூலூர் பக்கம் உள்ள குமாரபாளையம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அழகுமுத்து ( 33 ) இவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரமடைந்த அழகு முத்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து தனது உடலில் ஊற்றிமனைவி கண் முன் தீ வைத்துக் கொண்டார் .இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்நேற்று இறந்தார். இது குறித்து அவரது அண்ணன் முத்துராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.