வாகனப் பரிசோதனையின் போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடி ஆட்டைய போட்ட 11 போலீஸார் அதிரடி சஸ்பெண்ட்..!!

போபால்: ​வாக​னப் பரிசோதனை​யின்​போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீ​ஸார் சுருட்​டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்​கிழமை இரவு சப்​-டி​விஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்​டிஓபி) பூஜா பாண்டே தலை​மையி​லான குழு​வினர் வாகன சோதனை நடத்​தினர். அப்​போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்​தப் பணத்தை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, காரை ஓட்டி வந்த சோஹன் பார்​மர் என்ற ஹவாலா டீலரிடம் பணத்​தைப் பாதி​யாக பாதி​யாக பிரித்​துக் கொள்​ளலாம் என பேசி​யுள்​ளனர். மேலும் பணத்தை வழிப்​பறி செய்​து​விட்​ட​தாக போலீ​ஸில் புகார் கொடுக்​கு​மாறும் அவரிடம் போலீ​ஸார் கூறி​யுள்​ளார்.

மறு​நாள் காலை பந்​தோல் போலீஸ் நிலை​யத்​துக்கு வந்த ஹவாலா டீலர் சோஹன் பார்​மர் தனது பணம் பறி​போய்​விட்​ட​தாக புகார் தெரி​வித்​தார். அப்​போது போலீஸ் நிலை​யத்​தில் இருந்த சப்​-டி​விஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்​டிஓபி) பூஜா பாண்​டே, சோஹன் பார்​மரிடம் பையில் ரூ.1.45 கோடி பணம் இருப்​ப​தாக​வும், மீத​முள்ள ரூ.1.5 கோடியை நாங்​கள் பிரித்​துக் கொள்​கிறோம் என்று பேசி​யுள்​ளனர். சோஹன் பார்​மர் அந்​தப் பணத்தை எண்​ணிப் பார்த்​த​போது அதில் ரூ.25.6 லட்​சம் குறைந்​திருந்​தது. அந்​தப் பணத்​தை​யும் போலீ​ஸாரே அபகரித்​துள்​ளனர்.

இதுகுறித்த தகவல் கசிந்ததால், ஜபல்​பூர் போலீஸ் டிஐஜி, ஐஜி பிரமோத் வர்மா ஆகியோர் போலீஸ் நிலை​யத்​துக்கு வந்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது ஹவாலா பணத்தை போலீ​ஸார், கையாடல் செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து எஸ்​டிஓபி பாண்​டே, டவுன் போலீஸ் சப்​-இன்​ஸ்​பெக்​டர் அர்​பித் பைராம் உள்​ளிட்ட 11 பேரை சஸ்​பெண்ட் செய்ய உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. மேலும் 11 பேர் மீதும் லக்​ன​வாடா போலீஸ் நிலை​யத்​தில் பணம் வழிப்​பறி, கிரிமினல் சதி உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அது​மட்​டுமல்​லாமல் பெண் போலீஸ் அதி​காரி பூஜா பாண்​டே, டவுன் போலீஸ் எஸ்ஐ அர்​பித் பைராம், கான்​ஸ்​டபிள் ஜக்​தீஷ் ஆகியோர் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களிடம் விசா​ரணை நடை​பெற்று வருகிறது.