கோவை மே 29 கோவை துடியலூர் பக்கம் உள்ள கதிரி நாயக்கன்பாளையம், ரேணுகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாசன் ( வயது 48) மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவானது. இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த ஜெயப்பிரகாசன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் கயிற்றைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சங்கீதா துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மளிகை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை .
