353 போதை மாத்திரைகளுடன் கும்பல் கைது.

கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் நேற்று இரவு அங்குள்ள கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படிநின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 போதை மாத்திரைகளும், 150 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை யடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் ஜோதிபுரம், திருமலை நாயக்கன்பாளையம் கணேஷ் நகரை சேர்ந்த மோகன் குமார் ( வயது 29) பெரியநாயக்கன்பாளையம் சதீஷ்குமார் ( வயது 26) சிவகங்கை மாவட்டம், அழகாபுரி கிறிஸ்டோபர் (வயது 24 )என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ஒரு பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதே போல கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் கவுண்டபாளையம் சங்கனூர் ரோட்டில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 53 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், புது தோட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தாமரை (வயது 40) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து 53 போதை மாத்திரைகளும், ரூ 600 பணமும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.