கோவை ஜூன் 19 கோவை உக்கடம் கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார் .இது குறித்து கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என். ஐ .ஏ.) மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த என். ஐ. ஏ. அதிகாரிகள் கோவை உக்கடம் புல்லுக்காடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 15க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வனப்பகுதியில் கூடி கார் வெடிப்பு சம்பவத்தை நடத்துவது குறித்து . திட்டமிட்டது தெரிய வந்தது .மேலும் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் ஆதரவாளராக இருந்து வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே என் ஐ.ஏ அதிகாரிகள் கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபிக் கல்லூரியில் கடந்த 2023 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அந்த கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. மேலும் மாணவர்களை மூளை செலவு செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளில் சேர்க்க முயன்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக என் .ஐ. ஏ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கடந்த ஆண்டு 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் அரபிக் கல்லூரி வழக்கு தொடர்பாக விசாரிக்க நேற்று என். ஐ.ஏ அதிகாரிகள் கோவை வந்தனர் .அவர்கள் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அகமது அலி (வயது 35 )உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜவகர் சாதிக் ( வயது 30 )ஆகியோரை பிடித்து விசாரணைக்காக கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என். ஐ. ஏ. அலுவலகத்திற்குஅழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் இருவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது.இதில் சில திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் என் ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.கைது செய்யப்பட்ட அகமது அலி அரபிக் கல்லூரியின் முதல்வராகவும், ஜவஹர் சாதிக் அங்கு ஊழியராகவும் பணிபுரிந்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா முகமது மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷேக் தாவூத் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான 4பேரும் ஐ. எஸ். ஐ .எஸ் . பயங்கரவாத அமைப்பை ஆதரித்து அதற்கு மாணவர்களை மூளை சலவை செய்து சேர்க்க முயன்றதாகவும் என். ஐ. ஏ அதிகாரிகள். தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்க்க முயன்ற கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது.
