முன்னாள் ராணுவ வீரர் திடீர் மரணம்..

கோவை சவுரிபாளையம் ,மீனா எஸ்டேட் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46 )இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர் .குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பி.ஏன்.பாளையம்,ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் . இவர் நேற்று தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.