கோவை மே 26 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது54) இவரது அண்ணன் கருப்புசாமி(வயது 57) இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள்..இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மயில்சாமியும் ,அண்ணன் கருப்பசாமியும் படுகாயம் அடைந்தனர் .இது தொடர்பாக இரு தரப்பிலும் போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தம்பி மயில்சாமி கொடுத்த புகாரின் பேரில் அவரது அண்ணன் கருப்புசாமி மனைவி பாக்கியலட்சுமி மகள் நந்தினி ஆகியோர் மீதும்,அண்ணன் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் தம்பி மயில்சாமி அவரது மனைவி நிஷா மகள் அமுதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோஷ்டி மோதல் :அண்ணன் – தம்பி படுகாயம் .6 பேர் மீது வழக்கு.
