கோவை : நீலகிரி மாவட்டம், ஊட்டி, எமரால்டு, முன்னி, எம் .ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவன் ( வயது 74 ) இவர் நேற்று தனது மகனுடன் கோவைக்கு வந்திருந்தார் .உக்கடம் பஸ் நிலையத்தில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது . இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவன் அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது மகன் விசி கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக கேரள மாநிலம். பாலக்காடு, புதுச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் முத்து ரகுமான் (வயது 42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உக்கடம் பேரூந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி முதியவர் பரிதாப பலி..
