மழைக்கு டயர்வழக்கியதால் ஸ்கூட்டரில் இருந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.

கோவை மே 30 கோவை ராம் நகர், அன்சார் வீதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சிவராம் பை (வயது 78 )இவர் நேற்று கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு சென்றார் .அங்குள்ள முருகன் மில் அருகே சென்ற போது மழையின் காரணமாக ரோட்டில் டயர் வழுக்கி தடுமாறிஸ்கூட்டர் உடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காகஅங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மகன் சுதானந்த் மேற்குப் பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.