கோவை துணை கமிஷனராக திவ்யா பொறுப்பேற்பு.!!

கோவை மாநகர காவல் துறையில் தலைமையிடம் துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுகாசினி. இவர் சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார் .இவருக்கு பதிலாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த திவ்யா போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர தலைமையிட புதிய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கமிஷனர் சரவண சுந்தர் ,துணை கமிஷனர் தேவநாதன், கார்த்திகேயன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைமையிட துணை கமிஷனர் திவ்யாவை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..