கோவை ஜூன் 5 தமிழக சிறைத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். இவர் நேற்று கோவை வந்தார் பின்னர் அவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவி வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மற்றும் திண்டுக்கல் ஆகிய 5மாவட்ட தீயணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனையின் போது தீயணைப்பு நிலையங்களுக்கு தேவைப்படும் கருவிகள் தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறை உள்ளதா? என்பதை கேட்டறிந்தார். அப்போது கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி புளுகாண்டி கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. இன்னும் கூடுதலாக 2 வாகனங்கள் தேவைப்படுகிறது. அது போன்று தீயணைப்பு வீரர்களும் கூடுதலாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .இது தொடர்பாக ஆய்வு செய்து கோரிக்கையை நிறைவேற்றுவதாக டி.ஜி.பி. சீமா அகர்வால் கூறினார். தொடர்ந்து அவர் அதிகாரிகளிடம் பேசும்போது தீயணைப்பு மீட்ப பணிக்கு செல்லும் போது வீரர்கள் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும் .குறிப்பாக நீர் நிலைகளில் இறங்கும் போது அதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து விட்டு தான் செல்ல வேண்டும். அது போன்று பாம்புகளை பிடிக்கும் போதும் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார். பின்னர் அவர் தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய வீரர்களை பாராட்டினார். இந்த கூட்டத்தில் 5 மாவட்டங்களைசேர்ந்த தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்டத்தில் தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
5மாவட்ட தீயணைப்பு அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சீமா அகர்வால் ஆலோசனை.
