கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு.

கோவை ஜூன் 11 கோவை அவிநாசி ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளிக்கூடம் (பி.ஆர்.எஸ். உள்ளது.இங்கு காவல் துறைபணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .இந்த பயிற்சி பள்ளிக்கூடத்தை தமிழ்நாடு போலீஸ் பயிற்சி பள்ளி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் நேற்று ஆய்வு செய்தார். மேலும் அவர் அந்த பயிற்சி மையத்தை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .பின்னர் அவர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்த ஆய்வின் போது பயிற்சி பள்ளிக்கூட முதல்வர் குணசேகரன் ,துணை முதல்வர் பழனிக்குமார், பயிற்சி மைய போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.