மருதமலை கோவில் படிக்கட்டில் மயங்கி விழுந்து பக்தர் சாவு.

கோவை ஜூன் 24 கோவைகணபதி அருகே உள்ள சேரன் மாநகர சேர்ந்தவர் ரவி (வயது 73 ) இவர் நேற்று மருதமலை கோவிலுக்கு படிக்கட்டு பாதை வழியாக நடந்து சென்றார் .அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்த அவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.