மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமுல் ( வயது 33 ) இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள மத்திய ஆயுதப்படை (சி. ஆர். பி.எப்) பயிற்சி முகாமில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.ஆர்.பி.எப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் . இது குறித்து சிஆர்.பி.எப். முகாம் சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
சிஆர்பிஎப் முகாமில் ஒருவர் தற்கொலை..








