தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் தள்ளுபடி வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, 5 ஏக்கர் நிலமுள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. இத்தகைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், மாநில அரசின் இந்த தள்ளுபடி உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்றும், இதனால் அரசுக்குக் கூடுதலாக ரூ.5,932 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
75000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி







