கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்.

கோவை ஜூன் 20 தேனி மாவட்டம் .போடிநாயக்கனூர்,பக்கம் உள்ள பி. நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ரிதிகா ( வயது 19 )கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார் .நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது இது குறித்து அவரது தாயார் பாக்கியலட்சுமி மதுக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.