28 ஆண்டுகளாக தலை மறைவாக உள்ள கோவையை சேர்ந்த குண்டு வெடிப்பு கைதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..

கோவை ஜூன் 13 கடந்த 6 – 12 – 1997 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் எதிர் விளைவாக திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் விரைவு ரயில் மற்றும் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழா விரைவு ரயில் ஆகியஇடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை செல்வபுரம், கல்லா மேடு, மட்ட சாலை பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் அயூப்என்ற அஷ்ரப் அலி ( வயது 22)முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்..இவர் கடந்த 28 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்து வருகிறார்.இந்த நிலையில் திருச்சிகுற்றவியல் நீதித்துறை நடுவர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தலை மறைவு எதிரி அயூப்என்ற அஷ்ரப் அலி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் மேற்படி எதிரி வரும் 17 -7 -20 25 அன்று காலை 10:30 மணிக்கு திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜராக வேண்டும் . தவறும் பட்சத்தில் தலைமறைவு எதிரியான அயூப் என்ற அஷ்ரப் அலி ( வயது 22) விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு நோட்டிசை செல்வபுரம் , கல்லா மேட்டில் உள்ள அவரது வீட்டின் சுவரில் மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஓட்டினார்கள்