நஞ்சுண்டாபுரத்தில் சேவல் சண்டை சூதாட்டம். 6 பேர் கைது .

கோவை ஜூன் 24 கோவைராமநாதபுரம் பக்கம் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக இராமநாதபுரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார்..அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் ஒலம்பஸ், சங்கர் ( வயது 36) நஞ்சுண்டாபுரம் பாலாஜி (வயது 24) விக்னேஷ் (வயது 29) சுந்தராபுரம் காமராஜர் நகர் காந்தி (வயது 70) உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட் சங்கர் ( வயது 35)விஜய் ( வயது 30)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. சூதாடபயன்படுத்தப்பட்ட 5 சேவல்களும் ரூ.2, 350 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.