கோவை ஜூன் 14 கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள நாராயண நாயக்கன்புதூர், தோப்புக்காடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தே கவுண்டன் பாளையம் பிரவீன் குமார் ( வயது 23)சுல்தான்பேட்டை, நல்லூர் பாளையம்கோகுல் (வயது 21 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2சேவல்களும், சூதாட பயன்படுத்தப்பட்ட 400 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம். 2 பேர் கைது .
