கல்லூரி மாணவர்களிடையே மோதல்… மாணவனை இரும்பு கம்பியால் தாக்கிய சக மாணவர்கள்.!!

உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்யது . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார். நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மாணவர்கள் முன் விரோதம் காரணமாக இவரை இரும்பு கம்பியால் தாக்கினார்கள் . இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது . போலீசார் கல்லூரி மாணவர்கள் நவீன், விக்னேஷ் ,ரீதுஸ் ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..