சேலம்: இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசன குறுவை சாகுாக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) காலை பத்து மணியளவில் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டும்போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் . மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 16 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு, ஜனவரி 28-ஆம் தேதியுடன் மொத்தம் 230 நாள்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்போ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசன குறுவை சாகுாக வியாழக்கிழமை மேட்டூா் அணையில் இருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன்,எ.வ.வேலு, பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சிவசங்கர், மதிவேந்தன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர்இந்த நிலையில், மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 ஆவது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு மேல் நீர் இருந்தால் மட்டுமே சாகுு முழுமையாக நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருப்பதாலும், பருவமழை எதிர்நோக்கி குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதியான வியாழக்கிழமை பாசனத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளின் மின் விசையை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-ஆவது முறையாகும். நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 12-ஆம் தேதி முன்பு 11 முறையும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது 61 ஆவது முறையாகும் என்பது குறிப்பிடதக்கது.
மேட்டூா் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு திருச்சி, கரூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த 17.15 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக வினாடிக்கு 12,000 கனஅடி வரை அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சுரங்க மின் நிலையம் அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
மேட்டூா் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர்முதலில் குறுவைக்கும் பிறகு சம்பா, தாளடி சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4.41 லட்சம் ஏக்கரில் தாளடியும் சாகுபடி செய்யப்படும்.
காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-இல் 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12-க்கு முன்பாக 11 முறை என இதுவரை 91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12 இல் குறுவை சாகுு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதல்வர் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு, வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாள குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.