போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது;ஒருவழியாக உறுதி செய்த ஈரான்..

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. அமெரிக்காவின் ‘மிட்நைட் ஹேமர்’ நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் ஈரான், அதன் அணுசக்தித் துறையை வளர்ப்பதில் உறுதியாக இருக்கும் என்று கூறியது.இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.ஆனால் ட்ரம்பின் இந்த கூற்றை ஈரான் முதலில் மறுத்தது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார். மேலும் இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்தும் என்று ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் குறித்து ஈரான் வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ கருத்தாக அரக்சியின் அறிக்கை பார்க்கப்படுகிறது.இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல்களை ஈரான் தொடர்ந்து. இன்று மட்டும் 4வது முறையாக ஈரான் தன்னை நோக்கி ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் கூறியது.இன்று காலை இஸ்ரேலின் பீர்ஷெபா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் மீண்டும் ஈரான் யூ டர்ன் போட்டுள்ளது. ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்திற்காக “கெஞ்சினார்” என்று ஈரானிய செய்தி சேனல் IRINN கூறியது.இந்த நிலையில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு அமலுக்கு வந்ததாக ஈரானின் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.. இதனால் இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 12 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.