கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். இது இவருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.. ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளி ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 51 )கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுகுடிபோதையில் வீரமாத்தி அம்மன் கோவில் அருகே உள்ள நெல்லிக்காய் மரத்தில் காய் பறிக்க ஏறினாராம்.திடீரென்று கால் வழுக்கி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக ...
குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட 21 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் சிறந்த புலனாய்வுப் பிரிவினருக்கான முதலமைச்சர் விருது பெற்ற சூலூர் காவல் நிலைய ...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருசில தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களிடம் விபரக் குறிப்பேட்டில் சாதி, மத விபரங்களை கட்டாயம் தெரிவிக்கும்படி வற்புறுத்தியத்திற்கு எதிராக உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), ஆகியோரிடமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் முறையிடப்பட்டது. ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை நகரில் பள்ளிகளில் குழந்தைகளை விட இருசக்கர வாகனங்களில் அழைத்துவரும் பெற்றோர் ஹெல்மெட் அணியாமல் வருவதாக புகார்கள் வந்தன. இதனால் நகரம் முழுவதும் பள்ளிக்கூட பகுதிகளில் 4 நாட்கள் தீவிர வாகன சோதனை நடந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர ...
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களின் வீலிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் உதவி எண் 9487464651 கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு பல்வேறு ...
இந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய கொடுப்பனவு மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 சிறந்த மாற்று கட்டண முறைகளை பே செக்யூர் ஆய்வு செய்தது. இந்த நிலையில், பே செக்யூர் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் ...
திருவனந்தபுரம் : ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகையே புரட்டி போட்டுள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை. நடிகைகள், பெண் திரை கலைஞர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, எம்.எல்.ஏ, மூத்த நடிகர்கள், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் என பலரது பெயர் அடிபடவே கேரள திரையுலகம் மட்டுமின்றி தென் இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுவிட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், பொன்னி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 47 ) மின்வாரியத்தில் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காந்தி மாநகர் இ.பி. காலனி அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குட்செட் ரோட்டில் சாக்கடை கால்வாயில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து உக்கடம் கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு ...













