கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 73 ) இவர் நேற்று சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வந்த எலக்ட்ரிக் ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் மாரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...
தூத்துக்குடி மாவட்டம், கருவேலம்பாடு,மேல தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 58) இவர்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் தனது மகள் புஷ்பலதா வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபெருமாளும், அவரது தம்பி வெள்ள துரையும் மது அருந்தினார்களாம். பின்னர் பெத்தநாயக்கன்பாளையம்,கீர்த்தி நகரில் உள்ள உறவினர்வீட்டில் படுத்து ...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவை சேர்ந்தவர் மலையரசன் .இவரது மகள் தரணிஸ்ரீ (வயது 9) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர்கள் தங்கள் ஊரைச் சேர்ந்த 42 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்தனர். அவர்கள் 2 மினி பஸ்களில் கடந்த 14ஆம் தேதி இரவு சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு ...
கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை சரகத்தில் போலீசில் ஆன்லைன் மூலமாகவும் புகார் பெற்று பதிவு செய்யப்படுகிறது. பின்னர் இன்ஸ்பெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. தமிழக போலீசில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சி .சி. டி. என். எஸ். இணையதளத்தில் புகார் மனுக்களை பதிவு செய்ய முடியும். ...
2001 இல் நிகழ்ந்த 9/11 தாக்குதலின் மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் ஹம்சா பின்லேடனின் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சில தகவல்களின்படி, ஹம்சா இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் புதிய தலைவராக உருவெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் எதிர்ப்பு குழுக்களின் கூற்றுப்படி, ஹம்சா பின்லேடன் தற்போது ...
*12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், மலைகளில் பூக்கக்கூடியவை. இந்த வகையான மலர்கள் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், ஆண்டிற்கு ஒரு முறை, ...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட விளைப்பொருள்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது தேங்காய். தற்போது மாவட்ட அளவில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேநேரம், வட மாநிலங்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், கொப்பரை தேங்காய் எண்ணெய் உற்பத்தி, மருத்துவ பயன்பாட்டுக்கு ...
கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து குதித்து இன்று காலையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் பெயர் சிவகண்டன் என்பதும், இவர் கடலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்றும் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இவரது உடல் பிரேத ...
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை வழிமறித்து கற்களை கொட்டி அதிகாரம் செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், வட்டாச்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுயிட்டும் கற்களை எடுக்க மறுத்து அதிகாரம் செய்தும் மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ...
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி. மேல் சித்தரை சாவடி, தென்மநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை. மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களிலும் , நொய்யல் நதிக்கரை ஓரத்திலும் உயர் மின் கோபுரம் வழித்தடம் அமைக்க விவசாயிகள் எந்தவொரு அனுமதியில்லாமல் மின்சாரிய வாரியம் திட்டமிட்டு செயல்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் ...













