கோயில்களில் காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார். இது ...
கோயில் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கவும், அறநிலையத்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமைச்சர் ரமேஷ் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கோயில்களில் மேற்கொள்ளப்படும் குடமுழுக்கு விழாக்கள் மற்றும் புனரமைப்புப் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கடந்த 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் விக்னேஷ்வர பூஜையுடன் யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் ...
திருமலையில் சுமார் 1 மணி நேரமாக பெய்த பலத்த மழையால் ஏழுமலையான் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் திருமலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் திடீெரன கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த ...
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது . இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வால்பாறை தூய இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் புனித அந்தோனியார், வேளாங்கண்ணி மாதா, குழந்தை ஏசு ஆகிய சுருவங்கள் தேர் பவனியில் பவனி வந்து ...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் ...
தொடர் விடுமுறையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். தற்போது திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சாமி தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி ...
மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று அதிகாலை 5.48 மணியளவில் நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரண்டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் ...
சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்றிரவு 9.52 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ...












