சென்னையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் , பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாற்றியமைத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பணி நியமனங்கள், தேர்வுக் கட்டணம், என ...

பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 580 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான 21 கிலோமீட்டர் தூர அளவிற்கு ரூபாய் 43.75 கோடி மதிப்பீட்டில் ...

2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மார்ச்.20) தாக்கல் செய்யப்படவுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மூன்றாவது ...

அதிமுக உடனான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பதாக கசியும் தகவல், கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் ...

புதுடெல்லி: லண்டன் பேச்சு குறித்த சர்ச்சைகளுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க ராகுல் காந்தி முன்வந்த போதிலும், அவரை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் கடும் அமளி செய்ததால், தொடர்ந்து 5வது நாளாக இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், லண்டனில் காங்கிரஸ் முன்னாள் ...

நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசும் திமுக, சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கேம்பிரிட்ஜ் ...

அதிமுக முச்சந்தியில நின்னு மூணு, நாலு துண்டா உடைஞ்சுடும் என்று அரசியல் ஆரூடம் சொல்லி வந்தவர்கள் திருச்சியில் நிகழ்ந்த களேபரத்தை கொஞ்சம் அதிர்ச்சியாக தான் பார்த்தார்கள். கடந்த மார்ச் 15ம் தேதியன்று திருச்சி எஸ்பிஐ காலனியில் உள்ள திருச்சி சிவா எம்.பி யின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் நாற்காலிகளை அமைச்சர் நேருவின் ...

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது மகளிர் காவலர்களுக்கு நவரத்ன ...

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தாயாரின் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி காலமானார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அந்த இரங்கல் செய்தியில், “முன்னாள் முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் ...

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் திடீர் நெஞ்சுவலி அவருக்கு ஏற்பட்டிருந்ததாகவும், லேசான நுரையீரல் தொற்று அவருக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இருதய சிகிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ...