கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ் ) தடுப்பூசி முகாம் சூலூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சூலூர் பகுதியில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்ற நாய்களை நாய் பிடிப்பவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியருடன் இணைந்து வானங்கள் மூலம் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தோள்களில் ஏதேனும் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகர்பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வால்பாறை நகராட்சி மூலம் சுமார் மூன்றுகோடி மதிப்பீட்டில் அக்காமலை செக்டேம் முதல் வால்பாறை கோ.ஆப்பரேட்டிவ் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தேக்கத்தொட்டி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி ...

கோவை ஏப் 28 கோவை பீளமேடு எஸ். ஐ. எச். எஸ் காலனி உள்ள ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாரூக் ( வயது 63) இவர் நேற்று தனது மனைவி சபியா பேகத்துடன் சின்னியம்பாளையம், சிவன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஸ்கூட்டரில் இருந்து கீழே ...

கோவை ஏப் 28 திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யா (வயது 26) எம். பி. ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதமாக கோவை எல். அண்ட் . டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வந்தார்..இவர் கடந்த 2 ...

கோவை ஏப் 28 திருவண்ணாமலை மாவட்டம் , குப்பநத்தம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 26) தேனி மாவட்டம்,பழனி செட்டிப்பட்டி,ராஜாஜி நகரை சேர்ந்தவர் மரியசாமி (வயது 36) இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் .நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை -அன்னூர் ...

கோவை ஏப் 28 கோவை மாவட்டம், சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் , நால் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் திலக் ரிஷி (வயது 17) சிறுமுகை புதூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வந்தார் .இவர் நேற்று தனது நண்பர்களு டன் சிறுமுகை எலகம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க ...

சமீபகாலமாக அதிமுக நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்த செங்கோட்டையன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார். அண்மைகாலமாக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்த நிலையில் இன்று கலந்துகொண்டார். ...

உதகை ஏப்ரல் 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குசெல்வப்பெருந்தகை MLA அவர்கள் ஆணைக்கிணங்க,நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் R.கணேஷ் உதகை சட்டமன்ற உறுப்பினர் வழிகாட்டுதலின்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் ஏப்ரல் 25,26 ம் தேதிகளில் உதகையில் துனை வேந்தர்கள் மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் சட்ட ...

கோவை ஏப் 26 கோவை கரும்புக்கடை, பள்ளி வீதியைச் சேர்ந்தவர்முகமது ரபிக் .இவரது மகன் மோகன் ஹசன் ( வயது 27 )இவர் நேற்று சுண்ணாம்புக்களவாய் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ரூ 2,500 அவர் அணிந்திருந்த ...

கோவை ஏப26 கோவை குனியமுத்தூர், மேற்கு மைல்கல், இட்டேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி குமாரி ( வயது 47)இவரது கர்ப்பப்பை அகற்றுமாறு டாக்டர்கள் கூறியிருந்தனர் இதனால் மனம் உடைந்த குமாரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில்மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் அவரது உடல் முழுவதும் கருகியது.சிகிச்சைக்காக கோவை அரசு ...