திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை ...
இந்தியா முழுவதும் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் விதவிதமான முறைகளில் மோசடிகள் நடப்பது தொடர்கதை ஆகி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த மோசடி காரணமாக 17 ஆயிரம் கோடி பணம் ஆன்லைன் மூலம் ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நேற்று உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 3 கிலோ 662 கிராம் எடைகொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக இதை விற்பனை செய்த ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் ( வயது 38) சம்பவத்தன்று இவர்களது வீட்டில் பையில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து தங்கராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தன் வீட்டுக்கு தச்சு வேலைக்கு வந்த சக்தி என்பவர் மீது ...
கோவை ராமநாதபுரம் திருச்சி ரோடு சந்திப்பில் புனித ட்ரினிட்டி கத்தோலிக்க ஆலயம் உள்ளது . இங்குள்ள மாதா சிலை முன் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து 2000 ரூபாய் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஆலய செயலாளர் ஜெய்சன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியவதி ஆகியோர் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 70 கிராம் கஞ்சா, 99 போதை மாத்திரைகள் இருந்தது ...
கோவை ஆவராம்பாளையம், முருகன் கோவில் வீதியில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் ம.தி.மு.க. கிளை அலுவலகம் உள்ளது .இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் சிலர் இடித்து தரைமட்டமாக்கினார்கள் .இதுகுறித்து மதிமுக பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தர்ராஜன், கோகுல்ராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ...
கோவைதுடியலூர் பக்கம் உள்ள வெள்ள கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் சென்னை டி.நகர் பகுதியில் “நாதன் பவுண்டேஷன்” என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார் .கடந்த 2014 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் “சொகுசு காட்டேஜ்” கட்டி விற்று வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மாத வாடகையாக பல ஆயிரம் ரூபாய் ...
கோவை பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அங்கு விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி , சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு காந்திமா நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர் . விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ( ...













