கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற அருண்குமார் ( வயது 28) இவர் கோவை மாநகர கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ...
கோவை பக்கம் உள்ள தெலுங்குபாளையம், சிதம்பரம் காலணியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர்அங்குள்ள நாராயணசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக சென்ட்ரிங் ராடு , இரும்பு போன்ற சாமான்களை வீட்டினுள் வைத்திருந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவில் யாரோ அந்த சாமான்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மோகன் ...
கோவை பெரிய கடை வீதியில்,மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகளில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக நிர்மலா என்ற கமலா, ...
கோவை அருகே உள்ள கே. கே. புதூர், நஞ்சம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது தாயார் தனலட்சுமி ( வயது 75 ) தங்கை பிரபா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர் . அப்போது இவர்களைப் பற்றி முன்கூட்டி தெரிந்த ஒரு பெண் இவர்களது வீட்டில் புகுந்தார். கதவை உள் பக்கமாக தான் போட்டுவிட்டு தனலட்சுமி ...
கோவை மார்ச் 22சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி காவல் ...
கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு தனது தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நட்பாக பழகினர். மேலும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ...
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவில்உள்ள கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் ஜான்விக்டர் (44) ரவி மகன் ரஞ்சித் குமார் (37) மற்றும் கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ...
கோவை ஒண்டிப்புதூர் கோபால் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகள் அபிநயா ( வயது 21) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பாப்பம்பட்டி பிரிவு சந்தான லட்சுமி நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் நித்தியானந்தன் ( வயது 24 )என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நித்யானந்தன் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 54) இவர் பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.பஸ்சை விட்டு இறங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை. இது குறித்து ஈஸ்வரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 25 கிராம் கஞ்சா 9 கிராம் “மெத்தப்பட்ட மின் “என்ற உயர் ரக போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...













