கோவை மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ஜோஸ்பினுக்கு அப்பநாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஓட்டல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் ( வயது 34) அவரது மனைவி அஞ்சலி குமாரி (வயது 24) ஆகியோரிடம் குழந்தை விற்பனை ...

கோவை: நேரு ஸ்டேடியத்தில் கோவை மாவட்ட கால்பந்து சங்கம் செயல்பட்டு வந்தது. இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. பிறகும் கால் பந்து சங்கத்தினர் அந்த சாவியை மண்டல முதுநிலை மேலாளர் வசம் கொடுக்கவில்லை. இதனால் இளைஞர் நல அதிகாரி அருணா அந்த சங்க அலுவலகத்தை மற்றொரு பூட்டை வைத்து பூட்டினார். இந்த நிலையில் கால்பந்து ...

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள அரசு பள்ளிக்கூடம் பின்புறம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும் 3 கிராம் உயர்ரக போதை பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ...

கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.அந்த கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதி பெறாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த ...

கோவை : கேரள மாநிலம் வய நாடு, மண்டாடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 44 ) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் . இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரிடியம் வாங்கி தருவதாக ரூ 3 கோடியே 92 லட்சம் வாங்கினாராம். ஆனால் அவர் ...

கோவை: கர்நாடக மாநிலம்பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வருபவர்பெரோஸ் கான். அத்துடன் சீனாவில் இருந்து வரும் செல்போன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் டீலராகவும் இவர் உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவருக்கு கோவை குனியமுத்தூர் பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்த நிலையில் பெரோஸ் கான் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் ...

கோவை அருகில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முத்தையா . இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவரது தந்தை முத்தையா ராணுவத்தில் வேலை பார்த்து தற்போது இறந்து விட்டார். இவர்கடந்த தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று தயாருடன் துடியலூர் வெள்ள கிணறு சந்திப்பில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு சென்றனர். குமரேசன் ...

கோவை வெள்ளலூர் பட்டணம் ரோட்டில் உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் பிரேமா ( வயது 42) இவருக்கும் அதை ஊரை சேர்ந்த வேதாசலம் (வயது 48)என்பவருக்கும் 27- 1 – 2008 அன்று திருமணம் நடந்தது.இவரது கணவர் மங்களூரில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்குஅபிநய் ( வயது 16 ) கவுரவ் (வயது 13) ஆகிய ...

கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் . இவரது மகள் லக்ஷனா (வயது 18 )கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தங்கமணி ( வயது 59) இவர் வீட்டின் முன் போடப்பட்டிருந்த வேகத்தடையை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்தாராம். இதை லக்ஷனா கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் . இவரது மகன் நாகராஜ். இவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ (வயது 24)அவரது கணவர் கிருஷ்ணகுமார் (வயது 34) மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி (வயது 69) ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து அவரது மகன் ...