திருப்பூர் மாவட்டம் அங்கேரி பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் ,பிரதான வீதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 20ஆம் தேதி அந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி கல்லால் எ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது ...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது இதில் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர் ஒருவர் ...

டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தினாலும், முறையற்ற வடிகால் நிலைமையினாலும் மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பாக கட்டடத்தின் அடித்தளத்தில் தனியார் பயிற்சி மையம், நூலகத்தை இயங்கி வந்ததாக டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ...

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களது வாகனத்தை சோதனை ...

கோவை : சென்னை மேற்கு அண்ணா சாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திரா காந்தி (வயது 55 ) இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா (வயது 28) இவர்கள் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி கோவையைச் சேர்ந்த 18 பேரிடம் மொத்தம் ரூ.2 கோடி வரை ...

கோவை ராம் நகர், சரோஜினி வீதியை சேர்ந்தவர் முஷ்ரதுல்லா.இவரது மனைவி செரின் ( வயது 32) இவர் கடந்த 11 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். நேற்று திரும்பி வந்தனர் . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் பணம் ரூ92 ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் டாக்டர் வித்யா (வயது 55) இவர் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று தனது மருத்துவமனைக்கு செல்வதற்காக சோமனூர் – ஆத்துப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் டாக்டர் வித்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் ...

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி ,ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் ராதிகா (வயது 29) பெங்களூரூவில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் டினோ லினிகர் (வயது 29)என்பவருக்கும் 27- 12 – 23 அன்று திருமணம் நடந்தது.திருமணத்தின் போது நகை , பணம் வரதட்சணையாக கொடுத்தனர் . இந்த ...

கோவை பீளமேடு அருகில் உள்ள நேரு நகர் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68) தொழிலதிபர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். மூத்த மகள் அபிநயா (வயது 35 )தந்தையின் வீட்டின் அருகில் வசித்து வந்தார். இவரது கணவர் சென்னையில் தொழில் ...

கோவையில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது .குறிப்பாக வயதான பெண்கள் முதியோர்களை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ...