கோவை கணபதி ,காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்கா உள்ளது.இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன.சந்தன மரங்களும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் யாரோ மர்ம நபர்கள் பூங்காவில் புகுந்து அங்கிருந்தத 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், டைட்டல் பார்க்ஆகிய இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள நீதிமன்றம் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் இன்று ...
கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் ...
கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வனச் சரகா் குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ...
மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஜிந்தா ஒஸ்மான் (வயது 28) இவருக்கு கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இக்பால் (வயது 54 )என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் இக்பால் தனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும், அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக ஜிந்தா ஓஸ்மானிடம் தெரிவித்தார். மேலும் வேலைக்காக ...
கோவை டாட்டா பாத்தில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 49)இவரது மனைவி பிரியா (வயது 46) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேஷ் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவரது மனைவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வாராம். இந்த நிலையில் கணவர் மீது கடந்த ஆண்டு ...
கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று மாலைஆத்துப்பாலம் மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங்குறிச்சி,காட்டு கடை டாஸ்மாக் கடை ( எண் 1564) பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கடையை மூடிய பிறகு கள்ள சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 410 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் நேற்று காலை சாக்கு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் ...
கோவை மாவட்ட காவல்துறையினர்… சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று காருண்யா நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவாணி சாலையில் சோதனையில் ஈடுபட்டு ...













