நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த மாநாட்டில எந்த ஒரு ...
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கூலி திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 14ம் தேதி வெளியான இந்த படம் சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறையால் 404 கோடி ரூபாய் வரை வசூலில் குவித்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி படத்தின் இந்த ...
இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங்யீயிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள ...
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது 314 கி.மீ. தூரத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப் படை கேப்டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் ...
அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது உறைந்த, உயிரற்ற நிலப்பரப்புதான். ஆனால், அதன் பனிக்கு அடியில் ஒரு மறைந்த உலகம் உள்ளது. அது, இந்த ஒட்டுமொத்தப் பூமியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து வருகிறார்கள். ‘மரைன் ஜியாலஜி’ (Marine Geology) என்ற அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வுக் ...
மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி. மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அண்மையில் அவர் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, எதிர்க்கட்சி அணியில் உள்ள நீங்கள், பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘நான் ...
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இரயில் பயண சேவையை அளித்து வருகிறது இந்தியன் இரயில்வே. பயணிகளின் வசதிக்காக பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் இரயில்வே துறை, தற்போது மின்சாரத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களையும் மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளது இரயில்வே துறை. இதற்காக மிக எளிதில் ...
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கலசப்பாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “இந்த அணைக்கட்டு தொகுதி ...
கோவை ஆர். எஸ். புரம், தடாகம் ரோட்டில் உள்ள ராயப்பா புரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். .புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டுவிளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, டி.வி.கே. நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் ( வயது 67) இவர் அவரது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் வழுக்கி 10 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் ...













