கோவை மே 14 சென்னையில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் முதல் இருக்கையில் ஒரு பெண் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் இரண்டாவது படுக்கையில் பயணம் செய்த ஒருவர் பாத்ரூம் செல்வதற்காக கீழே இறங்கினார்.அப்போது அந்த இருக்கையின் சங்கிலி கழண்டு படுக்கை விழுந்தது. இதனால் முதல் ...
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். துருக்கி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. துருக்கியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி ...
ஜம்மு: ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மீண்டும் புதன்கிழமை(மே 14) மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரகத்தின் உத்தரவில் பள்ளிகள் மூடலுக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை. இதுதொடர்பாக கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ...
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் முக்கிய தளபதியாக இருப்பவர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த உடன் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து ...
அடையாளம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா ஒரு மின்-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட்டுகள் மேம்பட்ட மின்னணு பாஸ்போர்ட் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவா திட்டம் (PSP) பதிப்பு 2.0 உடன் இணைந்து ஒரு முன்னோடி முயற்சியின் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் திட்டத்தை செயல்படுத்துவது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1, 2024 அன்று செயல்பாட்டுக்கு ...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏப்.29 ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, உச்சநீதிமன்ற புதிய ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ...
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு துணிச்சலான விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்தியா – பாகிஸ்தானிடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் பல நாடுகளைத் திரும்பிப் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 20 19- ஆம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கியது. இதை யடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். ...
இந்தியாவுக்கு பயந்து, பாகிஸ்தான் அரசு தலைமறைவு பயங்கரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி அளிக்கத் தயாராகிறது. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஷாபாஸ் ஷெரீப்பின் அரசு ஷுஹாத் தொகுப்பை அறிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் ...