கோவை ஜூன் 5 கோவை ஆர். எஸ். புரம் , வி. சி. வி. லேஅவுட்டில் கோவை பிரியாணி ஓட்டல் என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருபவர் உமாபதி) (வயது 48) கடந்த 27.ஆம் தேதி ஒரு ஓட்டலுக்கு நடராஜன் அவரது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அப்போது கோழி குழம்பில் பல்லி கிடந்ததாக கூறி அதை எடுத்து இலையில் வைத்தார். இதை பார்த்து அருகில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் வாந்தி எடுத்தனர்.இந்த சம்பவம் யூடியூப்,மற்றும் இணையதளங்களில் வைரலாக பரவியது இதை யடுத்துஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலில் சோதனை நடத்தினார்கள் .இந்த நிலையில் ஒட்டல் உரிமையாளர் உமாபதி ஆர் .எஸ் . புரம் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார்.அதில் தன் ஓட்டலின் வியாபாரத்தை சீர்குலைப்பதற்காகஒரு கும்பல் திட்டமிட்டு பல்லியை கொண்டு வந்து உணவு குழம்பில் போட்டுநாடகம் ஆடினார்கள். எங்கள் ஒட்டல் குறித்து அவதூறு பரப்பிய நடராஜன் உட்பட நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் .இது தொடர்பாக ஆர் .எஸ். புரம் போலீசார் போலீசார் நடராஜ்அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒட்டலில் கோழி குழம்பில் பல்லி கிடந்ததாக புகார் செய்தவர் மீது வழக்கு.
