குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்..!

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2027, ஆகஸ்ட் 10ம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உட்பட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாகும் சூழ்நிலை உருவானால் ந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ எனபது அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த குடியரசு துணைத் தலைவர் தோ்தலுக்கான அறிக்கையை ஆகஸ்ட் 7ம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை ஆகஸ்ட் 21 கடைசி நாளாக கருதப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஆகஸ்ட் 25ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஆகஸ்ட் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை குடியரசு தேர்தலை பொறுத்தவரை செப்டம்பா் 9ம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.