நள்ளிரவில் மளிகை கடையை உடைத்து பணம் கொள்ளை.

கோவை ஜூன் 7 கோவை ரங்கே கவுடர் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மஞ்சிலால் (வயது 62)இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நள்ளிரவில் யாரோ கடையின் பின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணப்பெட்டியில் இருந்த ரூ1லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் மஞ்சிலால்புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.