வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வாலிபர் பிணம்..

கோவை, வ .உ .சி. பூங்கா மைதானத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நடைப்பயிற்சி சென்றவர்கள் இதை பார்த்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது பெயர் கற்பக அரசு( வயது 32) என தெரிய வந்தது.
சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள அஞ்சக்கோட்டை. இவர் திருப்பூரில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார. இந்த நிலையில் அவரது சகோதரி வித்யாவிடம் கோவைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இவர் எப்படி இறந்தார் ?என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது சகோதரி வித்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.