ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை முடித்து கோவைக்கு திரும்பியுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ...
சென்னை: நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் டூவீலர், கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கும். ஆனால் இந்த முறை கார், டூவீலர் விற்பனை மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆகஸ்ட் மாதத்தில் கார், டூவீலர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதன் பின்னணியில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான ...
தற்பொழுது போன் பே அதன் யூசர்களுக்காகப் புதுவிதமான ‘ஹோம் இன்சூரன்ஸ் ப்ராடக்ட்’ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தீ விபத்து, பூகம்பம், வெள்ளம், திருட்டுக் கலவரங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட அபாயங்களை எதிராக வீடுகள் மற்றும் அதில் உள்ள பொருள்களுக்கு காப்பீடு வழங்குகிறது. இதற்கான பிரீமியம் வருடத்திற்கு ரூ. 181 + ஜிஎஸ்டி. மேலும் இதன்மூலம் ...
டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சீண்டும் வகையில் பேசி உள்ளார். தற்போது உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இதனை சரிசெய்ய இரண்டு பெரிய பொருளாதார நாடான இந்தியாவும், சீனாவும் சேர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். 5 ஆண்டுகள் கழித்து நாளை மறுநாள் சீனா செல்லும் ...
வாஷிங்டன்: அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை வெளிநாட்டு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வி படிப்புக்களில் நிரந்தரமாக சேர்ந்து நாட்டில் தங்குவதற்காக என்றென்றும் மாணவர்களாக மாறிவிட்டனர். நீண்டகாலமாக கடந்த கால நிர்வாகங்கள் வௌிநாட்டு மாணவர்களையும் பிற விசா வைத்திருப்பவர்களையும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றி தங்க அனுமதித்துள்ளன. இது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தி ...
டோக்கியோ: 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்தார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா – ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் ...
கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது 64)இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த வசந்தகுமாரி (வயது 45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ள காதலாக மாறியது இதை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் பேச்சிமுத்துடன் பழகுவது நிறுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர் .இதன் காரணமாக பேச்சிமுத்துடன் பழகுவதை ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் கார்த்தி ( வயது 38)இவரது மனைவி நித்யா (வயது 37) கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்..இந்த நிலையில் நேற்று கார்த்திக் வீட்டின் அருகே வசிக்கும் ராஜா என்பவரது வீட்டினுள் ஒரு பாம்பு புகுந்தது .. இதை ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், பேர நாயுடு வீதியில் ஒரு வீட்டியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக் கந்தசாமி நேற்று மாலை அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதை நடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டம் ,நெல்லூரை சேர்ந்த ...
கோவை புலியகுளம், தாமு நகர்,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சக்தி முருகன் ( வயது 38)ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உடையவர்.மதுப்பழக்கத்தை மறப்பதற்காக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று காலையில்வெளியே சென்றஅவர் வீடு திரும்பவில்லை.செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.தேடிப் பார்த்தபோது சவுரிபாளையத்தில் உள்ள சாக்கடைகால் வாயில் சக்திவேல் முருகன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...













