பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .இந்த பிரிவின் கோவை மண்டலம் அலுவலகம் கோவையில் உள்ளது கோவை மண்டலத்தின் ...
போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னை கிண்டியில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்து ஹைகோர் மகாராஜா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், ...
கடந்த சில வருடங்களாகவே கோடைக்காலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெயிலை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில், வெப்ப அலைகள் போன்ற “புதிய மற்றும் வளர்ந்து வரும்” பேரிடர்களை மத்திய அரசு சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ...
கோவை கோர்சில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது .அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் ...
கோவை மாவட்டம் சிறுமுகை தாளத்துறை அருகே உள்ள ரவி என்பவரது தோட்டத்தில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 100 லிட்டர் கள்ளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக அன்னூர் போகலூர், மேல்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பக்கம் உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 19 வயது மகள் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பாரா மெடிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார.கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 16ஆம் தேதி தனது அக்காள் திருமணத்திற்காக ஊருக்கு சென்றவர்.ஊருக்கு செல்லவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது ...
கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- கோவை மாநகர போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், “டிராபிக் வார்டன் ” அமைப்பு லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் ...
கோவை வடவள்ளி சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40) இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வந்தார்.கொடிய விஷம் கொண்ட பாம்புகளை கூடபிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த ...
கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் சூலூர் ரோடு குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு வெள்ளை நிற பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க சோலார் தொப்பி – குளிர்பானம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நடந்தது. போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி ...













