எங்க மாநிலத்திலும் இருமொழிக் கல்விதான்.!!

சென்னை: கர்​நாட​கா​விலும் இரு​மொழிக் கல்​வியை​தான் பின்​பற்​றிவரு​கிறோம் என்று அம்​மாநில பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் மது பங்​காரப்பா தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் பன்​னாட்டு புத்​தகக் காட்​சி​யானது பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் சென்​னை​யில் 4-வது ஆண்​டாக கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று தொடங்​கியது. தொடக்க விழாவுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை தாங்​கி​னார். சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்ற திமுக எம்​.பி. கனி​மொழி மற்​றும் கர்​நாடக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் மது பங்​காரப்பா புத்​தகக் காட்​சியை தொடங்கி வைத்​தனர்.

இந்த விழா​வில் ஜெர்​மனி பிராங்க்​பர்ட் புத்​தகக் காட்சி துணைத் தலை​வர் (வணிக மேம்​பாடு) கிளாடியா கைசர், பிரான்ஸ் துணைத் தூதர் எதி​யன் ரோலான் பியக், பள்​ளிக்​கல்​வித் துறை செய​லார் பி.சந்​திரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், கேரள கல்​வித்​துறை செயலர் வாசுகி, பொது நூல​கத் துறை இயக்​குநர் ஜெயந்​தி, ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி இயக்​குநர் மா.ஆர்த்தி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் மது பங்​காரப்பா பேசும்போது, “தமிழகத்தை பின்​பற்றி கர்​நாட​கா​விலும் சர்​வ​தேச புத்​தகக் காட்​சியை தொடங்​க​வுள்​ளோம். கிராமப்​புறங்​களில் சுமார் 5,000 நூல​கங்​களை அமைத்​துள்​ளோம். இதன்​மூலம் வாசிப்பு பழக்​கத்தை ஏற்​படுத்தி இருக்​கிறோம். தின​மும் ஒரு கோடி பள்ளி மாணவர்​கள் அரசி​யலமைப்பு முக​வுரையை படிக்​கிறார்​கள். மேலும், இரு​மொழிக் கல்​வியை பின்​பற்றி வரு​கிறோம். தமிழ், மலை​யாளம், மராத்தி உள்​ளிட்ட அதி​கம் பேசக்​கூடிய மொழிகள் பாடத்​திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன” என்றார்.

இந்தப் புத்​தகக் காட்சி நாளை (ஜன.18) வரை நடை​பெறுகிறது. இதில் 102-க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்த பதிப்​பாளர்​கள் பங்​கேற்​கின்​றனர். தமிழகத்தின் 90 பதிப்​பாளர்​கள் உள்​நாட்​டுப் பங்​கேற்​பில் இடம்​பெற உள்​ளனர். மேலும் கேரளா, டெல்​லி, குஜ​ராத், கர்​நாட​கா, மராட்​டி​யம், ராஜஸ்​தான், மேற்கு வங்​காளம், தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் இருந்து 42 பதிப்​பாளர்​கள் பங்​கேற்​கின்​றனர். நிறைவு விழா​வில் முதல்​வர் ஸ்​டா​லின் பங்​கேற்​க​வுள்​ளார்.

பின்​னர் கர்​நாடக அமைச்​சர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ”மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கைக்கு தமிழகத்தைப் போல கர்​நாடக​மும் எதிர்ப்பு தெரிவிக்​கிறது. எங்​கள் தாய் மொழியை மதிக்​கிறோம். எந்த மாநிலத்​தி​லும் இந்தி திணிப்பை ஏற்க முடி​யாது. எங்​களிடம் மாநிலக் கல்விக் கொள்கை உள்​ள​தால் தேசிய கல்விக் கொள்​கையை ஏற்க முடி​யாது. கர்​நாடகத்​துக்​கும் கல்வி நிதி தர மத்​திய அரசுபாகு​பாடு காட்டி வரு​கிறது. அதற்​கும் தமிழகத்​துடன் சேர்ந்து போ​ராடி வரு​கிறோம். மத்​திய கல்​வித் துறை அமைச்​சருக்​கு தெரிந்​த ஒரே மொழி மோடி​யின்​ மொழி. அது​தான்​ பிரச்​சினை”என்​றார்​.