தமிழகத்திற்கு வரப்போகுது பேராபத்து… மீண்டும் முழு ஊரடங்கு?.. மக்களே உஷார்!!

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

எனினும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதனால் வருகிற நாட்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் ஓமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபாக “பிஏ 2” வைரஸ் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. மேலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த வைரஸ் தொற்று மைக்ரான் வைரஸ் தொற்றை போல இந்தியாவுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு பொது இடங்களில் கட்டுப்பாடுகள் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு போன்றவை மீண்டும் அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வைரஸ் தாக்கத்தில் தீவிரத்தை பொருத்தவரை இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.