தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜகவும், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ...

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (15-01-26) விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இந்த போட்டியில் ...

விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், முதல் பரிசைத் தீர்மானிப்பதில் நிலவிய பரபரப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.  மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித்தும், பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரனும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதனால் முதல் பரிசான கார் யாருக்கு என்பதை முடிவு செய்ய அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் ...

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதில், “உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள் – தைத்திருநாள் – உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, ரூ. 3,000 ரொக்கம் என ...

கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் புஷ்பா நகரை சேர்ந்தவர் சவுத்திரி . இவரது மனைவி உமா மகேஸ்வரி ( வயது 41) சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜி.டி .நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்டு வின்ஸ் அருகே வேகமாக சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி பின்னால் இருந்த உமா மகேஸ்வரி ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்னசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜிதார் முகமது (வயது 61 )இவரை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜிதார் முகமது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று உடல்நிலை ...

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65) ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.நேற்று இவரது வீட்டில் மனைவி ,மகன், தாயார் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . ...

திண்டுக்கல் மாவட்டம் ,பஞ்சம்பட்டி அருளானந்தர் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பிரின்ஸ் புரோனா ( வயது 19) இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அருகில் உள்ள முத்து நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (புதன் கிழமை)மாலை 5 மணிக்கு ராணுவ விமான மூலம்கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.. பின்னர் காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார் .இன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை ...

மேற்கு வங்காளம் , பீகார், அசாம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கோவை ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் கோவையில் போலீசார் அசாம் மாநிலத்தில் ...