மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம் செய்ய டிராக்டர் வழங்குகினார். ஊர் மக்கள் அவருக்கு மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு எம்.ஜி.ஆர் அன கோஷமிட்டனர். அப்போது பேசிய அவர், நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கு சேவை எண்ணம் தோன்றினால் போதும் ...

பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. 10 ஆம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாட்டில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகளும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களும், என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர்கள் தேர்வு எழுதினர். இதனை ...

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த முறை எம்.பி. யாக இருந்த திருநாவுக்கரசர் மீண்டும் தனக்கு திருச்சி தொகுதியை கேட்டு கடுமையாக முயற்சித்தார். ஆனால் இந்த தேர்தலில் திருச்சி தொகுதியை கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு கொடுத்து விட்டது திமுக தலைமை. திருச்சி இல்லையென்று ஆனதும், டெல்டா மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ,சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று பெரிய கடை வீதி லங்கா கார்னர், ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதிகாலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக விருதுநகர் மாவட்டம் செல்வகுமார் (வயது 64) கைது செய்யப்பட்டார். 36 ...

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிர்வாகியாக உள்ளார். இவர் கை துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைக்குரிய வாசகங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி புகார் செய்தார் . அதன் பேரில் லோட்டஸ் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு ...

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச சேர்க்கை வழங்கப்பட்டது. அஜிதாவின் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி அவரிடம் வழங்கினார். ...

ஆவடி : முன்னணி தமிழ் நாளிதழில் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மேலூர் தாலுக்கா தந்தை பெரியார் தெரு அழகர்சாமியின் மகன் சபரி மணிகண்டன் ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் ...

கோவை காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் கருப்புசாமி (வயது 25) தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பஸ் ஓட்டிச் சென்றார். அன்று இரவு 9:30 மணி அளவில் அவர் பேரூர் சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் ...

கோவை மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட உள்ளது .இதற்காக எம்ஜிஆர் மார்க்கெட் அருகே இருந்த 4 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு மற்றும் ...

கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கி உள்ளது. இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மாலை ...