தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தாலும் கோடை காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் வெயில் கொளுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலை குளிர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது ...

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக அமராவதியில் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: தேர்தல் முடிவுகள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மக்கள் நலனை விரும்பினேன். நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். 53 லட்சம் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டு ...

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுகோய் போர் விமானம் இன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானியும் துணை விமானியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம், ஷிராஸ்காவ் கிராமத்தின் அருகே உள்ள ஒரு வயலில் இன்று சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்ததில் அதன் பாகங்கள் உடைந்து ...

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 லட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷாவுக்கு 10,10,972 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ரமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் மட்டுமே பெற்றார். பாஜக மூத்த தலைவர் ...

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் குஜராத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. ...

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள சிங்கராம் பாளையம், பாரதியார் விதியைச் சேர்ந்தவர் மணி .இவரது மனைவி மங்கள சுந்தரி ( வயது 35) நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 12 மணி அளவில் கதவின் பூட்டை உடைத்து இவரது வீட்டினுள் புகுந்த ஒரு ஆசாமி ...

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42) இவர் நீலம்பூர், அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் .ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.கோவை ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று கோவை மாநகர காவல் – ஊர்க்காவல் படை இணைந்து போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கியது . இதற்கான விழா கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள சித்தண்ணபுரம் ரயில்வே காலனியை சேர்ந்தவர் அகமத் . இவரது மகள்கள் அப்ரின் (வயது 15) அம்ரின் ( வயது 13) இருவரும் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலையில் வீட்டில் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டன இதுகுறித்து அவரது தாயார் ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் பக்கம் உள்ள குஞ்சு மேனம் பதியச் சேர்ந்தவர் காளியப்பன் . இவரது மகன் விஜயன் ( வயது 34) இவரை 19-11-14 அன்று ஆனைமலை மீனாட்சிபுரம் விற்பனை வரி அலுவலகம் அருகே வைத்து மீனாட்சிபுரம் மஞ்சன் காலனியை சேர்ந்த துரையன் என்ற துரைசாமி ( வயது 50) ...