கோவை உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேப்பர் கம்பெனி அருகே நிர்வாண நிலையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் செல்வராஜ் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் அன்சர் பாட்சா. இவரது மகள் ஷிப்னா (வயது 18) இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தேர்வு எழுத கல்லூரிக்கு வந்தவர் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் நேற்று சிங்காநல்லூர் ஆனையங்காடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை மறைத்து வைத்து 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் ,ரங்கா நகரை சேர்ந்த கமாலுதீன் ...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. குழந்தை ...

கோவை மாநகரம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் குமரேசன். இவர் நேற்று இரவு கண்ணப்ப நகர், ஆர். ஜி. நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஸ்கூட்டரில் 4 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ்காரர் ...

கோவை : பெண் போலீஸ், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை 4 -வதுஜுடிசியல் மாஜிஸ்திரேட் ...

கோவையில் 41 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் வீதியில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏடீஸ் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகிறது. மழை நீரில் அதிக எண்ணிக்கையில் டெங்கு கொசு உருவாகும் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலம் ...

இளம் ராணுவ வீரர்களை குறுகிய கால சேவைக்கு நியமிக்கும் திட்டமான அக்னிவீர் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளது. பாதுகாப்பு ஆதாரங்களின்படி, இந்தத் திட்டங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அக்னிவீரர்களின் நலன் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் பல்வேறு மாற்றங்கள் செய்து பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போது, ​​நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், 25 சதவீத அக்னிவீரர்கள் ...

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் ...

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:- மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள திமுக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வரிடம், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்தின் நியாயங்களை எடுத்துக் ...