கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி துவக்கம் முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலர் அருட்திரு. R.D.E.ஜெரோம் மற்றும் கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் ...
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் ...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ...
சென்னை: குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ...
பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சுதந்திரம் அடைந்து 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். 1,000 ஆண்டுகளுக்கு மேல் அன்னிய நாட்டு ஆட்சியாளர்களிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்தோம். கடைசியாக சுமார் 400 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். இடைவிடாத போராட்டத்தின் விளைவாக 77 ஆண்டடுகளுக்கு முன் 1947 ஆகஸ்ட் ...
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11-வது முறை தேசியக் ...
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3-வது மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. செயற்கைக்கோள் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, எஸ்.எஸ்.எல்.வி.யின் வளர்ச்சி நிறைவடைந்ததாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்தார். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், சிறிய லிஃப்ட் ஏவு வாகனமான எஸ்.எஸ்.எல்.வி-டி ...
கோவை ரேஸ் கோர்சில் சி.எஸ்.ஐ . மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று சுதந்திர தினகொடியேற்று விழா நடந்தது. அருண் திலகம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கூட்டுக் கல்விக் குழு கன்வீனர் டி. ஜெபசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிஎஸ்ஐ கோவை வட்டகை தலைவர் அருட்திரு ...
கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவரது மகன் செல்வராஜ் ( வயது 27) பாணி பூரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். .இது குறித்து பேரூர் போலீசில் ...
புதுக்கோட்டை மாவட்டம் ,அரசகுளம், பாரதிநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 33)திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14ஆம் தேதி தனது சம்பள பணம் ரூ10 ஆயிரத்தை தொலைத்து விட்டார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் கருமத்தம்பட்டி, சென்னி ஆண்டவர் கோவில் வீதியில் அவர் தங்கி இருந்த அறையில் ...













