கோவை குற்றாலம், அருகே சிறுவாணி அணை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின , இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜதுரை படுகொலைக்கு நீதி வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் பொன்தோஸ், செல்வகுமார் நேரில் சென்று, பாதிப்புக்கு உள்ளான சாடிவயல் பகுதி கிராமத்தில் விசாரணை செய்தனர். ...
ஒரு மாத காலம் கெடு சாலையை சீரமைக்காவிட்டால் மாபெரும் போராட்டம். கூட்டுக்குழு தலைவர் வால்பாறை அமீது அறிவிப்பு. கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்டேட் வழியாக முடீஸ் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ...
400 பெண்கள் பங்குபெறும் கால்பந்து போட்டிகள், கோவை பேரூரில் நடைபெறுகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கேர்ள்ஸ் பிளே குளோபல் அமைப்பின் நிறுவனர் ஜனனி செய்தியாளர்களை சந்தித்தனர். கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்களுக்கு விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பதற்கும் ...
மகளிரணி மாநாட்டில் பங்கேற்க 29 ந்தேதி கோவை வருகை தரும் முதல்வருக்கு, கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது,மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக பகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பீளமேட்டில் ...
பி. கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) ,தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம். பெருமதிப்பிற்குரிய ஐயா, தமிழக விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள், பல ஆண்டு காலமாக விவசாய மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் இன்னலுற்ற நிலையில் ,தட்கல் மின் இணைப்பு வழங்க ஆணையிட்டதை விவசாயிகள் ஒருமித்து ...
காமராஜர் சாலை,இராமானுஜ நகரில்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்தை,கழக மேற்கு மண்டல பொறுப்பாள,ர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று,வாழ்த்துரை வழங்கினார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ...
மாண்புமிகு திரு. சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை. மதிப்பிற்குரிய ஐயா, தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களில் வெளிப்படையான இணையவழி முன்பதிவு முறையை அமல்படுத்துதல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் கோருதல் – தொடர்பாக. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைந்துள்ளனர். குறிப்பாக, 10 ரூபாய்க்கும் குறைவான நுண்-பரிவர்த்தனைகள் (Micro-transactions) ...
விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பஸ்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரம் பரிசோதனை செய்ய வேண்டும் – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் ! தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் : தி.மு.க தோற்கப் போகிறது – அண்ணாமலை கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்மஸ் விழாவில் தமிழக வெற்றிக் ...
184 அடி முருகன் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ...
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில்,செவிலியர் ஒருவர், தனது குழந்தையுடன் உணவு அருந்தும் காட்சி காண்பவர்களை கலங்க செய்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் டிச.18 ம் தேதி ...













