சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமா் மோடி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஏப்.3) சாலைப் பேரணி (ரோடு ஷோ) பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமா் நரேந்திர மோடி ...

மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கூறி​யிருந்த நிலை​யில் ஈரான் ராணுவம் இவ்​வாறு கூறி​யுள்​ளது முக்​கி​யத்​து​வம் வாய்ந்ததாக பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதி​காரி இப்​ராஹிம் சல்ஃப​காரி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியுள்ளதாவது: ...

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின்படி, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இன்று  முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் முழுமையான நடுநிலைமையைப் பேணும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. ஏற்கனவே ...

ஈரான் – இஸ்ரேல் போரின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விமானப் போக்குவரத்தை நிறுத்தியதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, நாடு முழுவதும் LPG வாங்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர். இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் ...

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான தூதரக மாநாடு நடைபெறவுள்ளது. எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த பாதையில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்ய பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த ...

செல்போன் நெட்வொர்க் பிடிக்கவில்லை என்றால் ‘போர்ட்டபிலிட்டி’ (Portability) செய்வது போல, இனி உங்கள் வங்கி கணக்கையும் பிடித்தமான வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ திட்டத்தின் கீழ், ‘PaSS’ (Payments Switching Service) என்ற புதிய முறையைக் கொண்டு வருகிறது. இதன் மூலம், உங்கள் பழைய வங்கி கணக்கு ...

40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி-யின் நினைவாக, கேரள மாநிலம் பாலக்காட்டில் அவரது முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.கண்ணூர் பய்யன்னூரைச் சேர்ந்த பிரபல சிற்பி கானாயி உன்னி இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட சிலை, கண்ணாடி உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ...

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கையில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், காரைக்குடியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திருப்புத்தூர், ...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய ...

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இருந்த அவசரத்தால், கடைசி நேரத்தில் விசிக-வுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “யார் என்ன தொகுதி கேட்கிறார்களோ அதைக் கொடுத்து அனுப்பி விடுங்கள்” என ...