பிகாரில் கட்டப்பட்ட விராத் ராமாயண கோயிலுக்காக மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிகாரின் கிழக்கு சம்​பாரன் மாவட்​டத்தில் உள்ள கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்​டப்​பட்டு வரு​கிறது. கம்போடியாவின் அங்கோர்வாட், ராமேஸ்வரம் ராமநாந்த சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி ...

தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், தேசிய கீதம் பேரவையில் ஒலிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து ஆளுநர் சற்றுமுன் வெளியேறினார். கடந்த ஆண்டுகளிலும் இதே போன்று ஆளுநர் ...

ஜாக்டோ-ஜியோ’ என்பது அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கான கு அமைப்பாகும். இந்த அமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே, ஆளும் அரசையும், எதிர்க்கட்சிகளையும் அணுகி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்புக்கு எதிராக அந்த ...

இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். இருப்பினும், விமானத்தில் இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘இந்தோனேசியா ஏா் டிரான்ஸ்போா்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏடிஆா் 42-500’ ரக விமானம் ஒன்று, ஜாவா தீவின் யோக்யகா்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசி மாகாணத் தலைநகரான ...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இன்று இரண்டாம் கட்டமாக விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக நேற்றைய தினம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சி தலைவர் விஜய்யை காண பல்லாயிரக்கணக்கானோர் ...

சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று ஆகும். பழங்களை உண்ணும் வவ்வால்கள், குதிரைகள், நாய்கள் ...

சென்னையில் அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு பூங்கா, தமிழகத்தில் மிகப்பெரிய ஏ.ஐ., புரட்சி உருவாக்கும் என நம்பப்படுகிறது.” உலக அளவில் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருந்து வருகிறது. உலகில் இருக்கும் முன்னணி நாடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு பூங்காவை ...

நீலகிரி மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகாரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக மாவட்ட கழகச் ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று முத்து கவுண்டன் புதூர், ராவுத்தூர் ரோட்டில் உள்ள வயக்காடு தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு (வயது 67) கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 6 லிட்டர் கள் பறிமுதல் ...

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சங்கம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அலுவலகத்தில் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் ...