தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் (Climate Science) ஆகிய நவீனப் பாடங்களைக் கொண்டு வருவது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் ...

தமிழகம் முழுவதும் 57 பெண் உதவி ஆய்வாளர்களை இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த 57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக ...

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ். அருண், போலீஸ் அகாடமிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக மகேஸ்வரி ஐபிஎஸ் இருந்துவரும் நிலையில் ...

டெல்லியில் அந்நிய செலாவணி வெளிநாடு வாழ் இந்தியர் வைப்புத்தொகைகள், வெளிநாட்டு வணிகக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணிக் கடன்கள் பரிமாற்றத் திட்டங்கள் குறித்த பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு வாழ் ...

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். பொருட்களின் தரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாகத் தரமான அரிசி வழங்குவதற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ‘தாயுமானவன்’ திட்டம் ...

சம்பளப் பிடித்தம் மற்றும் அடிப்படைச் சலுகைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து, வரும் ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மற்றும் சேர்க்கை மையங்கள் முற்றிலும் மூடப்படும் எனத் தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இ-சேவை மையங்களில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களுக்குத் தொடர்ந்து முறையான ஊதியம் வழங்கப்படாமல் சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதாகவும், பி.எஃப் ...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர்களையும் கட்சி நிர்வாகிகளையும் ...

சீனாவில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மிகவும் அரிதான இந்த வெண்கல பாட்டிலின் உள்ளே காய்ந்துபோகாமல் திரவ நிலையில் இருந்த பானம், ‘சின்’ (Qin) ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட பழமையான பீர் வகை மதுபானம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனப் பெருஞ்சுவருக்கு ...

கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப் பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர பகுதியில் சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு 4 பெண் சப்இன்ஸ்பெக்டர் 8 பெண் போலீசார் மற்றும் 4 போலீஸ் டிரைவர் ஆகியோரம் மாவட்ட காவல் துறையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் 4 பெண் போலீசார் 2 போலீஸ் ...

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியின் கீழ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் வரும் 673 திருக்கோயில்கள் ...