நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்குகிறது.ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைக்கிறார். இதற்காக பூங்காவில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, வண்ண மலர்களாக பூத்துக் குலுங்குகின்றன. மலர் மாடம் உள்பட பல இடங்களில் 50 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு ...
தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே தவெகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால், அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் இந்த புதிய அரசில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.அ.தி.மு.க-வைச் சேர்த்துக் கொள்வது புதிய அரசின் இமேஜுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தவெக தோழமைக் கட்சிகளின் ‘எய்ட் அண்ட் அசிஸ்டென்ஸ் மூலமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும். – காங்கிரஸ் எம்.பி ...
சட்டப்பேரவைத் தேர்தலின்போது புகாருக்குள்ளான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 4-ம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் ...
தமிழகத்தில் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் பணித் தேவையைக் கருத்தில்கொண்டு, 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலாளராக பி.சங்கர் ஐஏஎஸ் நியமனம் ...
நீதிமன்ற விசாரணை குறித்து கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் ஆகியோர் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி விடுவித்தது. இதற்கு எதிராக ...
சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதி அருகே உள்ள மதுபான கடையில், நள்ளிரவு மற்றும் சட்டவிரோத நேரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கடும் புகார்கள் எழுப்பப்பட்டன. இந்தச் சட்டவிரோத விற்பனையைத் தடுக்கத் தவறியதாக, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் மீது ...
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ...
ஒண்டிப்புதூர் செளடேஸ்வரி நகர் ரயில்வே பாலம் அருகில் 10வயது உள்ள சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இந்த சிறுவன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1.00மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனுடைய பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேவேளையில் பள்ளிகள் விடுமுறை தினங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் ...
தமிழகத்தின் முதல்வராக 10 ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், 11 ஆம் தேதி முதல் தொடர்ந்து சட்டசபைக்கு வந்து செல்கிறார். அங்கு அவர் அரசு ஊழியர்கள் போல் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வந்து அங்கேயே சாப்பிடுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ...













