அதிகாலையில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட,வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வராததால், தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அப்பன் டவுன் என்ற ஒற்றை காட்டு யானை, அங்குள்ள பார்வதி என்பவரின் குடியிருப்பின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்தது. சத்தம் ...
பீகாரின் முழு வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய தேர்தல் ஆணையருக்கு, சபாநாயகர் என்ற முறையில் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இது போன்ற தில்லுமுல்லு தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டாவது முறையாக ஸ்டாலினே முதல்வராக பொறுப்பேற்பார் என நெல்லை மாவட்டம் பனங்குடியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ...
சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் ...
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாகும் (TNDRF). இந்த அணியானது 10.11.2025 முதல் 12.11.2025 வரை காசியாபாத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) பேரிடர் மீட்பு போட்டியில் முதல் இடத்தை பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ...
வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணம் – போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்தினர் !!! கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம், கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்கு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், ...
கோயம்புத்தூர் விழா : அணிவகுத்த பழங்கால கார்கள் – மக்கள் குதூகலம் !!! கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் அணிவகுத்துச் சென்ற காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் ...
மருதமலை முருகன் கோவில் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.84.48 லட்சம்… கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 2 ஆயிரத்து 563 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 459 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 3,16,435 ...
ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு : கோவையில் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது – சரி செய்ய வந்த ஜே.சி.பி எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு !!! கோவை, சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ...
கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத்துறை 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவையில் கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேஷன் மையம் சார்பில் பாதுகாப்பு குறித்தான கருத்தரங்கு, கொடிசியாவில் வளாகத்தில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் தனியார் தொழில் துறையில் பங்கேற்பை ஊக்குவிப்பது, தொடர்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் ...
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது ராணுவ ஒத்திகையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், இன்று சிறிய ராக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்த பொதுமக்கள், விமானத்தின் அருகே ...













