ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடும். அதன்படி இந்தாண்டு இன்று ஜூலை 19ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே அவை காலை துவங்கிய உடனேயே எதிர்க்கட்சியினர் அமளியில் ...
கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய அந்த நிலையத்தின் எழுத்தாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, ...
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய 7 அதிகாரிகள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் மக்கள் யாருக்கும் லஞ்சம் ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழாய்வு, ஆய்வு அறிக்கை, இந்திய தொல்லியல் ...
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் தங்கள் கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண் நேற்று முன்தினம் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து காப்பாற்றிய சம்பவம் ...
இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், 2027-ல் முழுவீச்சில் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று தெரிகிறது. இந்த சோதனை முயற்சி முதலில் ...
காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று அவர் கூறியதாவது: காவல் மரணங்களில் போலீஸார் அல்லது சிறைத்துறை பணியாளர்கள் தவறு செய்திருந்தால் அரசு, அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும்.தவறு ...
மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலும் ரூ.1,024 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாடிப்பட்டி-தாமரைப் பட்டி இடையே (தேசிய நெடுஞ் சாலை எண் 744ஏ) 29.960 கி.மீ.தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச் சாலை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இந்த நான்கு வழிச்சாலையில் 02 மேம்பாலங்கள், 02 ...
நாட்டில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) தொடங்குகிறது இதுதொடர்பாக சென்னையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குநர் சுந்தரேஷ் பாபு நேற்று கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நடக்க உள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு, ‘வீட்டு பட்டியல் மற்றும் வீடு ...
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி மகா சபை என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதியை வழங்குமாறு ...













