துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் ...
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கான சைடு ...
கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவா் விஜய்க்கும், மாா்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற ...
தமிழகக் காவல் துறையில் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த 12 காவல் ஆய்வாளர்களுக்கு, துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, இதுவரை தற்காலிக டி.எஸ்.பி-க்களாகப் பணியாற்றி வந்த 12 அதிகாரிகளின் பதவிகள் இப்போது முறைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் ...
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு’ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதியதாக பதவி ஏற்றுள்ள ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் முஜ்தபா கமேனியும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் காயமடைந்துள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் ...
நாடு முழுவதுமே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே அஸ்ஸாம் மாநிலத்திலும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசு சுமார் 40 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்த தொகையில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ...
மேற்காசியவில் நிலவும் போர்பதற்றத்தால் விமான எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் விதமாக ஏர் இந்தியா உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் கட்டணங்களை (surcharge) அறிவித்துள்ளது. இதனால், ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விமான கட்டணம் உயர இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி ...
மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ...











