தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் ...
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று (25-05-26) உத்தரவிட்டார். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 ...
பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மிக முக்கியப் பகுதியாக, தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய முயற்சியான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது அரசாணையாக ...
தமிழக வெற்றிக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலத்தில் பல்வேறு கொலைச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இத்தகைய விமர்சனங்களைச் சாதாரணமாக ஒப்புக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ...
இந்திய ஒன்றிய அளவில் பா.ஜ.கவை எதிர்க்க 2023 ஆம் ஆண்டு இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.காங்கிரசு தலைமையில் செயல்பட்டு வந்த இந்த அணியில் திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல், தேசியவாத காங்கிரசு சரத்பவார் கட்சி, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி,டெல்லி தேர்தலுக்கு ...
மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய ...
பக்ரீத் பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3,700 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: மே 28-ம் தேதி (பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29-ம் தேதி (முகூர்த்தம்) மற்றும் அதைத் தொடர்ந்து வரும் வாரவிடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் ...
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து எந்தவொரு துறையில் மோசடி அல்லது குளறுபடி நடந்தாலும் உடனடியாக விமர்சனங்கள் கிளம்புவதற்கு முன்பாக விரைவான துறை ரீதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. தவெக விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை ...
தமிழகத்தில் விஜய்யின் த.வெ.க ஆட்சி அமைத்ததில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கோவில், பள்ளி அருகில் உள்ள 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்திருந்தார். அது தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தற்போது முறைகேடுகள் நடக்கும் குவாரிகள் மீது தமிழக அரசு பார்வை ...
அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, சமூக வலைத்தளத்தில் கடந்த மே 16 அன்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யை தொடங்கினர். அதாவது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இதற்கு, கண்டனம் தெரிவிக்கும் விதமாகத் ...













