நன்னையம் செய் அறக்கட்டளையின் சார்பில்  கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மெல்மருந்தங்கரை மற்றும் கீழ்மருந்தங்கரை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த மனிதநேய சேவை நிகழ்ச்சியை நன்னையம் செய் அறக்கட்டளை தலைவர் அருண் கார்த்திக், செயலாளர் கணேஷ் மற்றும் பொருளாளர் ...

அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 44 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதால் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை ...

திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை  அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். கோவை, மாநகராட்சி பீளமேடு  52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது ...

நெல்லை ஜங்ஷன் பகுதிகளில் அதிக அளவில் செல்போன் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் செல்போன்களின் உதிரி பாகங்கள், போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நெல்லை அறிவுசார் சொத்துரிமை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை அறிவுசார் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ஜங்ஷன் பகுதியில் ...

எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில், 13 இன்ஜினியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.எந்திரங்களை சரிபார்த்து அதில் பழுது இருந்தால் அவற்றை இன்ஜினியர்கள் சரி செய்வார்கள் என்றும் பழுது உள்ள   இயந்திரங்கள்   மாற்றப்படும்.என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.    தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி ...

கோவையில் தி.மு.க வினர் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் (தி.மு.க, பா.ஜ.க போன்றவை) இடையே தொடர்ந்து சர்ச்சை போஸ்டர் மோதல்கள் நடந்து வந்தது, இதனால் போராட்டங்களும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று பதற்றமான ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  151 மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்   , சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண விகளுக்கு  தமிழக அரசின் விலை இல்லா  மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர்  தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, கிரித்திகா ஆகியோர் 151 ...

கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த ஜாக்கெட் அணிந்து, பெண் சேர்மன் நிகழ்ச்சிக்கு வந்தது பேசு பொருளாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை பகுதியில், பள்ளிக்கல்வித் துறையின் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி  நடைபெற்றது.இந்த விழாவில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ...

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்றங்களில் இ பைலிங் முறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இ பைலிங் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக ...

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் ...