சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்று கூறி வருவதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் ...
தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, த.வெ.க தொண்டர்கள் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காவல்துறை முன்னிலையில்,அ.தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்ட பின் தான் விடுவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியப் பகுதிகளில், அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளரின் சொந்த ...
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சித் தேர்தல் மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் பனையூரில் நடைபெற உள்ளது. சமீபத்தில் மகளிர் தினத்தை ...
ஏர்டெல் டவர் கதிர்வீச்சு மூலம், ஐந்து பேர் உயிரிழந்து உள்ளதாகவும், டவரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இப்பகுதியில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன. அதில் ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம் புடுங்கி கவுண்டனூர் பகுதியில், கடந்த சில வருடங்கள் ...
நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆருக்கு காட்பாடியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. காட்பாடி அருகில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் மும்மத அடையாளங்களுடன் இந்தக் கோவிலை எம்ஜிஆரின் தீவிர தொண்டரான டி.ஆர்.முரளி கட்டியுள்ளார்.’தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் முருகப்பெருமான் வேடத்தில் நடித்திருப்பார். அத்தோற்றத்தை உடைய, ஏறக்குறைய 5 அடி உயரச் சிலை இக்கோவிலுக்காக ...
வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது முன்பதிவு நேரம் 15 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதாவது இப்போது ...
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 20-26 சதவீதம் உயர்ந்துள்ளது.பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 116.30 டாலராகவும், டபிள்யூடிஐ 115.41 டாலராகவும் உயர்ந்துள்ளது.இது 2022 ஜூலைக்குப் பிறகு இல்லாத உயர்வாகும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று ஒரு நாளில் மட்டும் ...
“திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக-வை சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கிறது. ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அது தான் ...
பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன என்று நிதீஷ் குமாா் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நிதீஷ் குமாா் வெளியிட்ட பதிவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் என் மீது தொடா்ந்து நம்பிக்கை வைத்து, ஆதரவளித்துள்ளீா்கள். அந்த நம்பிக்கையின் பலத்தில்தான், பிகாருக்கு முழு ...
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின், இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது.மக்களவை தலைவரை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மாா்ச் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான ...













