மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய வித்யாலயா சங்கதன் (KVS), 2026-27 கல்வியாண்டிற்கான மூன்றாவது மொழி கட்டமைப்பைச் செயல்படுத்துவதன் கீழ், அனைத்து மத்திய வித்யாலயா பள்ளிகளிலும் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவையாவது பராமரிப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே 29 அன்று வெளியிடப்பட்ட ...

தமிழக முதலமைச்​சரும் தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் மற்​றும் அவரது மனைவி சங்​கீதா இடையே​யான விவாகரத்து வழக்​கு, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​தில் இன்று  விசா​ரணைக்கு வரு​கிறது. சங்​கீ​தா, கடந்த 2025 டிசம்​பர் 24-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், தமக்கு விவாகரத்து வழங்​க​வும், நிரந்தர ஜீவ​னாம்​சம் வழங்​க​வும் ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதியதாக பொறுப்பேற்ற பின்னர், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த மாதமும் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், தவெக ஆட்சியில் நிறுத்தப்படுமோ என்கிற அச்சம் பரவலாக இருந்தது. ஆனால், இந்த திட்டங்களை ...

கோழித் தீவனம், போக்​கு​வரத்து செலவு உயர்​வால் ஒரு முட்​டை​யின் கொள்​முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்​நாடு கோழிப் பண்​ணை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் தெரி​வித்​துள்​ளார். நாமக்​கல்​லில் நடந்த சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டத்தில் அதன் தலைவர் சிங்​க​ராஜ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் கோழிப்​பண்​ணைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆட்​கள் பற்​றாக்​குறையைச் சமாளிக்க 100 நாள் வேலைத்திட்​டப் ...

தென்​கொரி​யா​வில் சிவ​காசி பட்​டாசுகளை காட்​சிப்​படுத்த அனு​மதி பெறப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா தெரி​வித்​தார். சிவ​காசி​யில் டான்​பாமா அலு​வல​கத்​தில் பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் உடன் தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது பட்​டாசு உற்​பத்​தி​யாளர் சங்​கங்​கள் சார்​பில் பட்​டாசு ஏற்​றும​திக்கு அனு​மதி அளிக்க வேண்​டும். ஏற்​றும​திப் பொருட்​களில் ஆரஞ்சு நிறப் பிரி​வில் உள்ள பட்​டாசை வெள்ளை அல்​லது ...

தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் வகையிலும், அவையின் நெறிமுறைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள்வதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முன்முயற்சியை எடுத்துள்ளது. வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி முகாம் (Orientation Program) நடைபெறவுள்ளதாகச் சட்டமன்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் ...

சாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பிரிவினையை தூண்டக் கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை என்று கூறிய ராஜ்மோகன், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் ...

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களில் உள்ள பிரசாத கடைகள் தொடர்பாகப் பல புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார். ...

உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், நேற்று பங்குச்சந்தையில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் வணிகப் புரட்சியின் மூலமாக உலகின் முதல் ‘டிரில்லியனர்’ (லட்சம் கோடி அதிபர்) என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே அசுர வேகத்தில் உயரத் ...

பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ...